Wednesday, November 3, 2010

கண்ணீர் அஞ்சலி

 

இப்போது கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற கொடுமை தான் பெரும் பரபரப்பாக உள்ளது...
 
ஒரு பெண் குழந்தை மற்றும் அவளது தம்பியை இரண்டு மிருகங்கள் சேர்ந்து கொடுமையாக கொன்றுள்ளதுகள்..
 
இல்லை இப்போது எல்லாம் மிருகங்களை விட மனிதன்தான் மிக கொடூரமானவனாக மாறி விட்டான்.
மிருகங்கள் கூட உணவுக்காக அல்லது  தனக்கு ஆபத்து என்றால்  தான் இன்னொரு உயிரை கொல்லும்.. ஆனால் மனிதன் தான் தன் பேராசைக்கும், சுயநலத்துக்கும் கொலை செய்கிறான்..
 
அந்த பிஞ்சு உள்ளங்களை கொன்ற அந்த அரக்கனை மாதக்கணக்கில் வைத்து துண்டு துண்டாக சித்ரவதை செய்து வெட்டிக்கொன்றால் கூட பாவமில்லை என்றே ஆத்திரம் வருகிறது...
 
அந்த பிள்ளைகளின் முகத்தை பார்த்து கொல்ல கூட ஒருவனுக்கு மனம் வருகிறதா? என நினைக்கும்போது ஆத்திரமும் அழுகையும் தான் வருகிறது,.. அந்த நேரம் அந்த பிள்ளைகள் என்ன துடித்ததோ தெரியவில்லையே...
 
அந்த தாயின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை...
 
அந்த பிஞ்சு உள்ளங்கள் ஆத்மா சாந்தி அடையவும்... அந்த அரக்கர்கள் கடுமையான தண்டனை பெறவேண்டும் என்றும்  பிரார்த்திக்கிறேன்
 
பெற்றோர்களே... உங்களை தவிர வேறு யாரையும் நம்பி பிள்ளைகளை எங்கும் அனுப்ப வேண்டாம்...

2 comments:

  1. எனது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கிறேங்க ..!!

    ReplyDelete
  2. கண்ணீர் அஞ்சலி - கண்ணீர் சிந்துவதா இல்லை சினம் கொள்வதா என்று புரியவில்லை.. சிறந்த எழுத்து நடை ..

    ReplyDelete