Monday, August 30, 2010

புதுக்குறள் - 10

வேறுஒரு ப்ளாக் கில் சுட்டது .... தேங்க்ஸ் டு வசந்த்
 
பணமிலார் எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...



அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...



முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...



மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...



கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...



குடிக்க போதை தலைக்கேற ஏறியபின்
நிற்க அதற்குத் தக...



மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...



சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...



தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...



காதல் இனிது கவிதை இனிது என்னும் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...

No comments:

Post a Comment