Monday, August 30, 2010

உஷ்....சத்தம் போடாதே....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ன்னு சோம்பல் முறித்து...

ஸ்ஸ்..ஸ்ஸப்பான்னு உச்சா போயிட்டு...

கர்ச்ச்..கர்ச்ச்..க்ரிச்..கிரிச்ன்னு பல் விளக்கிட்டு...

கொப்..கொப்..கொப்ப்ப்..கொப்..கொப்..கொப்புன்னு...வாய் கொப்பளித்து...

ஃப்பூ..ஸ்ஸ்..ப்பூ...ஊதிட்டே காபி குடிச்சுட்டு...

மீண்டும் ம்ம்ம்ம்ன்னு முக்கி முனகி டாய்லெட் போயிட்டு...

ஃப்பு..ஃப்பு..ன்ன்னு தலைக்கு குளிக்கும்பொழுது வாய்ல விழும் தண்ணிய ஊதிட்டு...

ப்ச்தா...ப்ச்தா...ன்னு நீயூஸ் பேப்பர் எச்சில் தொட்டு புரட்டிட்டு...

ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்,,ஊதிட்டே சூடான இட்லி சாப்ட்டுட்டு...

க்டக்...க்டக்...க்டக்ன்னு தண்ணி குடிச்சுட்டு

ஏவ்வ்வ்..ஏவ்வ்வ்வ்ன்னு..ஏப்பம் விட்டுட்டு...

ப்ப்..ன்னு கண்ணாடி முன்னாடி வாய மூடி சீவிட்டு...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ன்னு சிகரெட் புகை உள்ளிழுத்து

ஃப்ப்ப்பூ...ன்னு புகைய வெளிய விட்டு

லொக்..லொக்..ன்னு இருமிட்டு...

ஹ..ஹ..ஹ..ன்னு மூச்சு விட்டு ஓடி பஸ் பிடிச்சு

அப்பாடான்னு...இடம் கிடைச்சு...

நற நற..நறன்னு சில்லரை கொடுக்காத கண்டக்டரை முறைச்சுட்டு...

ம்ஹும்..ம்ஹும்..சீன்னு...சாக்கடை நாத்தம் பார்த்து...

அச்..அச்..ன்னு தூசினால தும்மிட்டு...

ஹ ஹ ஹான்னு நண்பர் பார்த்து சிரிச்சுட்டு..

ப்ச்..ப்ச்ன்னு..பிச்சையெடுக்கும் சிறுமி பார்த்து...

லலலா லலலான்னு...ஹம்மிங்க் பாடிட்டு வீடு திரும்பி

ஸ்ஸ்ஸ் அம்மாடின்னு ஹாயா சோஃபால உக்கார்ந்துட்டு...

திரும்பவும்...சொட்டாய்ங்...போட்டு சாப்ட்டுட்டு...

ப்ச்ன்னு..தூங்கிட்டு இருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துட்டு...

ஆவ்வ்வ்ன்னு...கொட்டாவி விட்டுட்டு...

கொர்ர்..கொர்ர்...ன்னு குரட்டை விட்டு தூங்கிப்போனேன்..(இத்தோட நிப்பாட்டிக்கலாம்)

மீண்டும்..காலையில..ம்ம்ம்ம்ம்ன்னு ஆரம்பிக்கிறது இந்த மொழியில்லா சத்தங்களுடன் வாழ்க்கை......

(தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் வாசக நண்பர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்)

No comments:

Post a Comment