Saturday, September 18, 2010

எனக்கு 3 தேசிய விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது பாண்டிராஜ்.

முழுக்க முழுக்க கு‌ழந்தைகளையும், குழந்தைகளின் நட்பு, சண்டை, பாசத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பசங்க படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைந்துள்ளன. இந்த விருது மகிழ்ச்சியை கொண்டாடி வரும் டைரக்டர் பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு தேசிய விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என்னோட எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த படத்துக்கு வசனம் எழுத ரொம்பவே நேரம் எடுத்துக் கொண்டேன். யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.பசங்க படத்தை தயாரித்த சசிகுமார் கூறுகையில், `பசங்க படத்துக்கு சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.பசங்க படம் திரைக்கு வந்தபோதே நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அந்த வாழ்த்துகள் இப்போது பலித்திருக்கிறது.இப்படியொரு பெருமை கிடைப்பதற்கு ரசிகர்கள் மற்றும் டைரக்டர் பாண்டிராஜ், படத்தில் நடித்த மற்ற நடிகர்-நடிகைகள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்தான் காரணம். அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

No comments:

Post a Comment