Tuesday, September 14, 2010

ஐயோ படிக்கலயே..


பரீட்சை
எனக்கு
லீவு நாட்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது
அந்த நாட்களில்தான்
உன் தொல்லையிலிருந்து
ஓய்வெடுக்கலாம்

கேள்வி
நீ எந்தப் பேப்பரிலும்
கஷ்டமாகத்தான் இருக்கிறாய்
தவணையில் வரும் போது
இன்டெக்ஸ் நம்பருடன்
கூடிய கஷ்டமாகிறாய்

பிட்டு
எனக்கு மட்டும் என்று நினைத்து
இதுவரை எழுதிவந்தேன்
நீ கேட்டதும் கேட்காமலேயே
ஓடுகிறதே பிட்டு பேப்பர்

பரீட்சை நேரசூசி
சொல்லிவிட்டுத்தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வந்த பிறகே
நினைக்கிறது அந்த மனது
ஐயோ படிக்கலயே

புத்தகம்
படிப்பதைவிட
என்னுடம் உறங்கவே
நேரம் சரியாக இருக்கிறது
என் புத்தகத்துக்கு

விடைத்தாள்
உன்னில் கிறுக்குபவருக்கெல்லாம்
வாரி வழங்குகிறாய்
உன்னை ஒன்றுமே செய்யாத
எனக்கு அப்பாவின்
அடியை மட்டும் பரிசளிக்கிறாயே!

பி.கு –ஆங்.. யாருய்யா அது கத்தி எடுக்கிறது #எஸ்கேப்

No comments:

Post a Comment